close
Choose your channels

10 ஆண்டுகள் தொகுதிப்பக்கம் வராதவர்: அதிமுக எம்பியை அறிமுகம் செய்த பாமக நிர்வாகி

Saturday, March 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதிகளை பெற்று பாமக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் ஒருவரை பாமக நிர்வாகி ஒருவர் பத்து ஆண்டுகளாக தொகுதிப்பக்கம் வராதவர் என்று விமர்சனம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வேணுகோபால் அறிமுக கூட்டம் இன்று கும்மிடிபூண்டியில் நடைபெற்றது. இந்த தொகுதியில் வேணுகோபால் கடந்த பத்து ஆண்டுகளாக எம்பியாக இருந்து வரும் நிலையில் இவரை அறிமுகம் செய்த பாமக நிர்வாகி, 'எம்பி வேணுகோபால் நல்லவர்தான், ஆனால் பத்து ஆண்டுகளாக தொகுதிப்பக்கம் வராதவர் என்ற குறையை தவிர அவரிடம் வேறு எந்த பெரிய குறையும் இல்லை' என்று கூறினார். இதனால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே மாங்கனிக்கு பதில் தாமரைக்கு ஓட்டு கேட்டது, கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர், மோடியின் பேரன் ராகுல்காந்தி என ஒரு அமைச்சர் பேசியது ஆகியவை அதிமுக கூட்டணியில் வாய்தவறி பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.