சண்முகப்பாண்டியன் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,July 10 2019]

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய 'வீரம்', 'வேதாளம்', மற்றும் 'விவேகம்' ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பூபாலன் என்பவர் இயக்கவிருக்கும் இந்த படத்தில் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக, முதல்முறையாக போலீஸ் கேரக்டரிலும் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக ரோனிகா சிங் என்ற நடிகை நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு 'மித்ரன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த் பல படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து மிரட்டியது போல் இந்த படத்தில் சண்முகப்பாண்டியன் தனது தந்தையை போல் மிரட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

அருண்ராஜ் இசையில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் வம்சிகிருஷ்ணா நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஜி எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது
 

More News

பாட்டில்கேப் சேலஞ்சில் அசத்திய இன்னொரு தமிழ் நடிகர்!

கடந்த சில நாட்களாகவே உலகம் முழுவதிலும் உள்ள திரை நட்சத்திரங்களால் பாட்டில்கேப் சேலஞ்ச் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஹாலிவுட் நடிகர்களான ஜேசன் ஸ்டாதம்

ஜாமீனில் வெளிவந்த நந்தினிக்கு திருமணம்

மது ஒழிப்புப் போராளி நந்தினி நேற்று ஜாமீனில் வெளிவந்த நிலையில் இன்று அவரது திருமணம் நடந்து முடிந்தது

அஜித்துக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுத்தாரா போனிகபூர்?

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தையும் எச்.வினோத் இயக்கும் இன்னொரு படத்தையும் போனிகபூர் தயாரிக்கின்றார் என்பதும் இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து அஜித்துடன் போனிகபூர்

பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியால் அஜித் படத்திற்கு சிக்கலா?

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய அபிராமியால்,

பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி ஆக்கும் ஜெய் பட நாயகி

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 3ஆம் பாகம் சமீபத்தில் ஆரம்பித்து சண்டை, சச்சரவு, ரொமான்ஸ் ஆகியவற்றுடன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது.