புயலில் விழுந்த மரங்கள்: சாமானியன் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர்

வங்க கடலில் உருவாகிய நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்று கூறப்படும் நிலையில் புயல் கரையை நெருங்க நெருங்க சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது

இதனால் சென்னையில் உள்ள ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து சாலை நடுவே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி அருகே இன்று மாலை மரம் ஒன்று விழுந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வந்துள்ளது. அதேபோல் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஒரு மரம் விழுந்ததை அறிந்தவுடன் மாநகராட்சி ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் புயலால் விழும் மரங்களை அப்புறப்படுத்த மரம் அறுக்கும் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய சென்னை பகுதியில் 3 இயந்திரங்களும், வடசென்னையில் இரண்டு இயந்திரங்களும், தென்சென்னையில் ஒரு இயந்திரமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்

இந்த பதிவுக்கு கமெண்ட் அளித்த ஒரு டுவிட்டர் பயனாளி, ‘புயல் முடிந்தபிறகு தயவு செய்து அந்த மரங்களை மீண்டும் நடவும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’கண்டிப்பாக தம்பி’ என்று பதிலளித்துள்ளார். சாமானியனுக்கும் உடனுக்குடன் பதிலளிக்கும் தமிழக முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது,

More News

உலகப் பணக்காரர் வரிசையில் பில்கேட்ஸையே பின்னுத்தள்ளிய எலான் மஸ்க்!!!

SpaceX நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் எலான் மஸ்க் உலக பணக்காரர் வரிசைப் பட்டியலில் உலகின் முன்னணி பணக்காரரான பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2 ஆவது இடத்தைப் பிடித்து

நிவர் புயலுக்கு பெயரை தேர்ந்தெடுத்தது யார்???

பொதுவாக அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு அதை ஒட்டியுள்ள வங்கதேசம்,

புயல் எதனால் ஏற்படுகிறது??? எளிமையான விளக்கம்!

பூமியின் சுழற்சி காரணமாகக் காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருமாறுகிறது என அறிஞர்கள் கூறுகின்றனர்.

மொட்டை மாடியில் மழையில் நனைந்து குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் நடிகை!

ஒரு பக்கம் நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த புயல் என்னென்ன சேதங்களை உண்டாக்குமோ என தமிழக அரசும், தமிழக மக்களும் பதட்டத்தில் உள்ளனர்

பலத்த சூரைக்காற்றால் விழுந்த மரம்: பிரபல இயக்குனரின் கார் சேதம்!

வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதியில் நேற்றிலிருந்து கனமழை பெய்து வருகிறது