close
Choose your channels

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பது எப்போது? முதலமைச்சர் விளக்கம் 

Thursday, October 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உடன் தான் ஆலோசனை செய்ததாகவும் அந்த குழுவினர் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்த தங்கள் பரிந்துரைகளை விரைவில் மருத்துவ வல்லுநர்கள் முதல்வரிடம் அளிப்பார்கள் என்றும், அதன்பின்னர் பள்ளி, கல்லூரி திறக்கும் தேதி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.