ராணுவ வீரரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எளிமையின் சின்னமாக இருப்பதாகவும் அவரிடம் சமூக வலைதளம் மூலம் ஒரு கோரிக்கை வைத்தால் உடனடியாக நிறைவேற்றபடுவதாகவும் ஏற்கனவே வெளிவந்த செய்திகளை பார்த்தோம்.

இந்த நிலையில் ராணுவ வீரர் ஒருவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தாயாரின் உடல்நிலை குறித்து முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் அதில் கூறியிருப்பதாவது: ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயது வீட்டில் தனியாக உள்ளார் உடல் நிலை சரியில்லை எனக்கு தந்தையும் இல்லை சகோதரனும் இல்லை எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை என குறிப்பிட்டிருந்தார்.

இந்த டுவீட்டுக்கு உடனடியாக பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’தாய் நாட்டுக்காக போராடும் தங்களின் தாயாரின் உடல்நிலை குறித்து உடனடியாக கவனிக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை அடுத்து உறுதி அளித்தபடி அவர் குறிப்பிட்ட முகவரிக்கு மருத்துவ ஊழியர்களை அனுப்பி அவருக்கு தேவையான பரிசோதனை செய்து, மருந்துகளும் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தங்கள் தாயாருக்கு தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லை. நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள அந்த ராணுவ வீரர், ‘நன்றி ஐயா... இப்படி ஒரு உதவியையும் ஆதரவையும் நான் எதிர்பார்க்கவே இல்லை. நன்றிகள் பல’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

உலகின் தலைசிறந்த சொல்லை செய்து காட்டுவோம்: சிவகார்த்திகேயன்

கொரோனா வைரஸ் தாக்கம் மிக வேகமாக பரவி வந்தாலும் கொரோனாவின் சீரியஸ் குறித்து இன்னும் பலர் அறியாமல் ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

மே 3க்கு பின்னரும் ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதல் கட்ட ஊரடங்கு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை இருக்கும்

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று புதிதாக 33 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ரஜினி, கமல் பட நாயகியின் ஃபேஸ்புக் கணக்கு ஹேக்: போலீஸில் புகார்

ரஜினிகாந்த் நடித்த 'தளபதி', 'சிவா', கமல்ஹாசன் நடித்த 'எனக்குள் ஒருவன்' உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக கடந்த 90களில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஷோபனா.

ஆன்லைனில் ரிலீஸ் ஆகிறதா அனுஷ்கா படம்? தயாரிப்பு தரப்பு விளக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீடிக்கும்