இந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் ரேஷன் கடைகள்… கொரோனா நேரத்தில் அதிரடி காட்டும் தமிழக முதல்வர்!!!

 

தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு நடமாடும் ரேஷன் கடைகளுக்கான திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். இது இந்திய அளவில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் முதற்கட்டமாக 3,501 நடமாடும் ரேஷன் கடைகளின் செயல்பாட்டை முதல்வர் தொடங்கி வைத்தார். கொரோனா பரவல் நேரத்தில் இது தமிழக மக்களுக்கு பேருதவியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நடமாடும் கடைகளால் மக்கள் சமூக இடைவெளியை எளிமையாகக் கடைபிடிக்க முடியும் என்பதோடு வீட்டு வாசலிலியே மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையும். இதனால் மக்களின் நேரமும் மிச்சமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மக்கள் ஒன்றுகூடும் வார்டு அல்லது தெரு முனைக்கே ரேஷன் பொருட்கள் கொண்டு வரப்படும். மக்கள் தங்களது வீடுகளின் அருகிலேயே பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் நடமாடும் ரேஷன் கடைகள் செயல்படும் நாள், வழங்கப்படும் பொருட்கள் போன்றவற்றிற்கான விவரங்கள் முன்னதாக தெரிவிக்கப்பட்டு விடும். இந்த விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து நியாய விலைப் பொருட்களை விநியோகிக்கும் அதிகாரிகள் பெற்றுக் கொள்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் இடங்கள் அரசாங்கத்தின் ஊராட்சி கட்டிடம், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டிடம் அல்லது மக்கள் ஒன்றுகூடுவதற்கு ஏற்ப பொது இடமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 36 ஆயிரத்து 437 குடும்ப அட்டைத்தாரர்கள் பயன்பெறுவர்.

இதற்குமுன் திருச்சி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 43 மொபைல் ரேஷன் கடைகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. தற்போது இத்திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. மார்ச் 2020 இல் மாநிலச் சட்டசபையில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்குவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்ட வரைவை தாக்கல் செய்திருந்தார். மேலும் இத்திட்டத்திற்காக ரூ.9.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் பொதுமக்கள் நெரிசலில் அவதிப்படுவது குறைவாகும். மேலும் மலைக்கிராம மக்கள் எளிதாகப் பொருட்களை வீட்டிற்கு அருகிலேயே பெற்றுக் கொள்ள முடியும். நேரத்தைச் செலவிட்டு தொலைதூரத்துக்கு செல்ல வேண்டிய தேவையும் இருக்காது. இத்திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவை திட்டமாக இருக்கும் என்பதையும் தமிழக அரசு சுட்டிக் காட்டியிருக்கிறது.

More News

ஓட்டலில் ராஷ்மிகா திருடிய பொருள்: வைரலாகும் வீடியோ!

ஓட்டலில் தங்கியிருந்தபோது தான் ஒரு பொருளை திருடியதாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றேனா? கமல் பட நடிகர் விளக்கம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

'கமல்ஹாசன் 232' படத்தில் புதிய டெக்னாலஜி அறிமுகம்!

உலகநாயகன் கமலஹாசன் தனது படங்களில் புதுப்புது டெக்னாலஜிகளை அறிமுகம் செய்து வைப்பார் என்பது தெரிந்ததும். டால்பி, டிடிஎஸ் உள்பட பல டெக்னாலஜி அவரது திரைப்படங்களில் அறிமுகம் செய்யப்பட்டது

மீண்டும் தனி விமானத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல் ஜோடி: வைரலாகும் புகைப்படம்

லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் காதல் ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன் தனி விமானத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட கேரளா சென்றனர்

நிஜ வாழ்க்கையிலும் ஆக்சன் ஹீரோவான நடிகர்: கேட்டை உடைத்து தள்ளியதால் பரபரப்பு

பிரபல ஹாலிவுட் ஆக்சன் நடிகரும், WWE விளையாட்டு வீரருமான ராக் என்ற டிவைன் ஜான்சன் சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றுக்காக வீட்டை விட்டு கிளம்ப தயாராக இருந்தார்.