close
Choose your channels

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்

Wednesday, January 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அலங்காநல்லூரில் பற்றிய சிறு நெருப்பு இன்று சென்னை மெரீனா வரை காட்டுத்தீயாக கொழுந்துவிட்டு எரிகின்றது. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர்களின் தொடர் போராட்டம் கொடுத்த அழுத்தம் காரணமாக நாளை அதிமுக எம்பிக்கள் அனைவரும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளதாக சிலமணி நேரத்திற்கு முன்பாக செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் சற்று முன் வந்த தகவலின்படி பாரத பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை சந்திக்க உள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற பிரதமரை முதல்வர் வலியுறுத்துவார் என்றும் இதன் மூலம் இந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.