close
Choose your channels

இபாஸ் நடைமுறையில் புதிய தளர்வு: அதிரடி அறிவிப்பு விடுத்த முதல்வர் பழனிசாமி

Friday, August 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவசர காரியமாக செல்ல வேண்டுமென்றால் இபாஸ் வாங்கிய செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அவ்வளவு எளிதில் இபாஸ் கிடைப்பதில்லை என்றும் பல அவசர காரியங்களுக்காக விண்ணப்பிக்கப்பட்ட இபாஸ் நிராகரிக்கப்பட்டது என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன

மேலும் மற்ற அனைத்து மாநிலங்களிலும் இபாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்திலும் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் விண்ணப்பித்த அனைவருக்குமே இபாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் இபாஸ் உண்டு என்பதால் தேவையற்ற பயணங்களை செய்ய வேண்டாம் என்றும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டுமே இபாஸ் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு வெளியிட்ட வழிகாட்டு நடைமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும், அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.