திரையரங்குகள் திறக்க அனுமதியா? நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை!

  • IndiaGlitz, [Thursday,July 29 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும், அதன் பின்னர் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் தளர்வுகளும் அதிகரித்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பள்ளிகள் கல்லூரிகள் திரையரங்குகள் தவிர கிட்டத்தட்ட அனைத்தும் திறக்கப்பட்டன என்பதும் தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இருப்பினும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என நீண்ட நாட்களாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரையரங்குகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்திகளின்படி தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை செய்ய உள்ளார். ஜூலை 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் நாளை முதல்வர் கூடுதல் தளர்வுகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளார் என்றும், நாளைய ஆலோசனையில் திரையரங்குகள் திறப்பது குறித்த அம்சங்களும் இடம் பெறும் என்றும், கூடுதல் தளர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளிவரலாம் என்றும் தெரிகிறது.

More News

ஷில்பா ஷெட்டியும் கைதாக வாய்ப்பா? மும்பை போலீஸார் சொல்வது என்ன?

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா என்பவர் ஆபாச படம் தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சமீபத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்

வித்தியாசமான மேக்கப்பில் சூப்பர் சிங்கர் பிரகதி: கலாய்த ரசிகர்கள்!

விஜய் டிவியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்து பிரபலமானவர் பிரகதி குருபிரசாத் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் புகழ் ஆஜித் தான்

டீன் ஏஜில் பிகினி போஸ் கொடுத்த இலியானா: வைரல் புகைப்படம்

பிரபல நடிகை இலியானாவுக்கு தற்போது 33 வயது ஆகும் நிலையில் அவர் டீன் ஏஜில் இருக்கும் போதே பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம்

ரியோ-பவித்ராலட்சுமியின் ஆல்பம்: பிங் ரெக்காரட்ஸ் செய்த புதிய முயற்சி!

தனிஇசை ஆல்பத்திற்கு வரவேற்பு சமீப காலங்களில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. 

வெறும் 7 ரூபாய் முதலீடு.. முதுமை காலத்தை இனிமையாக்க பெஸ்ட் பென்ஷன் திட்டம்!

அமைப்புசாரா ஏழை, எளிய மக்களும் தங்களது முதுமை காலத்தை இனிமையாக கழிக்க உதவும் வகையில் மத்திய அரசு,