தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்வு

கொரோனாவால் தமிழகத்தில் 9 பேர் இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்பது பேர்களும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸால் சென்னையில் 5 பேர்களும், கோவையில் ஒருவரும், ஈரோடு பகுதியில் இருவரும் நெல்லையில் ஒருவரும் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மாலை வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக இருந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் கலிபோர்னியாவிலிருந்து வந்தவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், துபாயிலிருந்து வந்தவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'தலைவா' என அழைத்து ரஜினிக்கு நன்றி கூறிய 'டுவிட்டர் இந்தியா'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று முன் தினம் பதிவு செய்த கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவுக்கு ஏகப்பட்ட புகார் வந்ததால், டுவிட்டர் இந்தியா

இந்த மாதிரி ஆளுங்களை வச்சுகிட்டு கொரோனாவை எப்படி ஒழிக்க முடியும்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு மிக எளிதாக பரவும்

சென்னை உள்பட 3 மாவட்டங்கள் முடக்கப்படுகிறதா? முதல்வர் அவசர ஆலோசனை!

கொரோனா வைரஸை தடுக்க நேற்று நடைபெற்ற மக்கள் சுய ஊரடங்கு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து கட்டுப்படுத்த,

வெளிமாநில பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் நிறுத்தம்: தமிழக அரசின் அடுத்த அதிரடி

கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை காக்க தமிழக அரசு அவ்வப்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து

பிரபல இயக்குனர் விசு காலமானார்!

பிரபல தமிழ் இயக்குனர் விசு உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 74