தமிழகத்தை இரண்டாக உடைத்துவிட வேண்டாம். கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகவே தமிழக நிலவரம் குறித்து பரபரப்பான கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு பிரச்சனை சமயத்தில் அவரது கருத்துக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது நிலவி வரும் அரசியல் அசாதாரண சூழ்நிலை குறித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தை இரண்டாக உடைத்துவிட வேண்டாம். என்னை கேட்டால் அகில இந்தியாவும் தமிழ்நாட்டுக்காக அகிம்சை வழியில் போராட வேண்டும். இந்த போராட்டத்தினால் யாரும் உயிரிழக்க மாட்டார்கள். மேலும் அறியாமையில் இருப்பவர்கள் பலர் விழித்தெழுவார்கள்' என்று கூறியுள்ளார்.

இன்னொரு பதிவில் அவர் கூறியபோது, 'பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவதை விடுத்து, நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா? என கேட்டுள்ளார்.

மேலும் 'சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம, இந்த நேரத்துல ஒருd ubsmash ஆவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர். அதன் பின்னர்தான் நடிகர்கள்' என்று கூறினார்.

More News

அதிமுக எம்.எல்.ஏக்களின் டெல்லி பயணம் திடீர் ரத்து

தமிழக முதல்வராக சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் கவர்னர் வித்யாசாகர் ராவ் தாமதம் செய்து வருவதால் இதுகுறித்து புகார் அளிக்க அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் டெல்லி சென்று குடியரசு தலைவரிடம் முறையிட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்&

அதிமுக வங்கிக்கணக்கை முடக்க வேண்டும். வங்கி அதிகாரிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்

தமிழக முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று வரை அதிமுகவின் பொருளாளராகவும் இருந்தார். ஆனால் நேற்றிரவு சென்னை மெரீனாவில் ஆழ்ந்த தியானத்திற்கு அவர் அளித்த பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது...

'கபாலி'க்கு பின் 'சி 3' படத்திற்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய முக்கிய தீர்ப்பு

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி 3' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் சி3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் &

சேமிப்பு கணக்கில் இருந்தும் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வு. ஆர்பிஐ உத்தரவு

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் வங்கியின் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது...

அதிமுக எம்.எல்.ஏக்கள் கடத்தலா? எம்.எல்.ஏக்களுடன் செல்லும் 2 பேருந்து எங்கே ?

இன்று காலை அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் நடந்தது...