close
Choose your channels

தமிழகம் வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு: பிரதமர் மோடி

Wednesday, March 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதமர் மோடி இன்று சென்னையில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தையும் ஆரம்பித்தார். அவருடன் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்றைய் பொதுக்கூட்டத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர், இனி எம்ஜிஆர் ரயில் நிலையம் என்று மாற்றிய பிரதமர் மோடி, இனிமேல் சென்னை உள்பட தமிழகத்திற்கு வந்து செல்லும் விமானங்கள் குறித்த அறிவிப்பு தமிழிலும் அறிவிப்பு செய்யப்படும் என்று அறிவித்தார்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் இனி விமான நிலையத்திற்கு சென்றால் எந்தவித பிரச்சனையும் இருக்காது.

மேலும் ஈழத் தமிழர்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், உலகத்தில் எந்த மூளையில் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் மத்திய அரசு சென்று உதவி செய்யும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.