ஓபிஎஸ்- மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு. நேரில் ஆதரவு தெரிவித்தார்.

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு இதுவரை எம்.எல்.ஏக்கள் மட்டும் ஆதரவு கொடுத்து வந்த நிலையில் அவருக்கு ஆதரவு கொடுக்கும் முதல் கேபினட் அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் தனது ஆதரவை தெரிவித்தார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.
இந்நிலையில் சற்று முன்னர் முதல்வர் ஓபிஎஸ் அவர்களை மாஃபா பாண்டியராஜன் அவருடைய சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
முக்கிய அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் அவர்களே ஓபிஎஸ் அவர்களின் அணிக்கு வந்துள்ள நிலையில் பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் இந்த அணிக்கு வருவதற்கான அறிகுறி தெரிவதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், 'அதிமுகவில் பிளவு ஏற்படக்கூடாது என்பது அனைவரது விருப்பம், பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி கட்டுக்கோப்புடன் இருக்கவேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.

More News

போயஸ் கார்டன் இல்லத்தை 24 மணி நேரத்தில் கைப்பற்ற வேண்டும். பிரபல அரசியல் கட்சி தலைவர்

தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சந்தித்துவிட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் சசிகலாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை.

சசிகலாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம். ஓபிஎஸ்-இன் அடுத்த அதிரடி

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து கொண்டு வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றுவது, ஆட்சி அமைப்பது மட்டுமின்றி ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை சசிகலாவிடம் இருந்து மீட்டு நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்பதும் அவரது கடமைகளில் ஒன்றாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்...

கூவத்தூர் விடுதியில் நடப்பது என்ன? காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் பேட்டி

கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதாகவும், சுய விருப்பத்தின் பேரிலேயே விடுதியில் அவர்கள் தங்கியிருந்ததாக தெரிவித்ததாகவும், தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் தெரிவித்ததாகவும் காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் சற்று முன்னர் பேட்டியளித&#

மாபா பாண்டியராஜனை அடுத்து ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு அதிமுக விஐபி

முன்னாள் காவல்துறை அதிகாரியும், மைலாப்பூர் எம்.எல்.ஏவுமான கே.நட்ராஜ் அவர்களும் ஓபிஎஸ் அணிக்கு வரவுள்ளதாகவும், அவர் அனேகமாக இன்று மாலை முதல்வரை சந்தித்து தனது ஆதரவை தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது...

மேலும் ஒரு அதிமுக அமைச்சர் ஓபிஎஸ் அணிக்கு வருகையா?

நேற்று வரை சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து கொண்டிருந்த அமைச்சர் மாஃபா பாண்டியாராஜன் அவர்கள் தற்போது ஓபிஎஸ் அணிக்கு வர தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது...