தேர்தல் அதிகாரி டுவீட்டை மேற்கோள் காட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'சர்கார்' திரைப்படம் வெளியானவுடன் தான் 49P என்பதே பொதுமக்களில் பலருக்கு தெரிய வந்தது. ஒருவருடைய வாக்கை இன்னொருவர் கள்ள ஓட்டாக போட்டுவிட்டாலும் 49P விதியை பயன்படுத்தி வாக்குச் சீட்டு மூலம் உங்கள் வாக்கை பதிவு செய்யலாம். இந்த விழிப்புணர்வு 'சர்கார்' திரைப்படம் வெளியான பின்னரே அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் வரும் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையரின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு 49P குறித்து ஒரு டுவீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 'உங்கள் வாக்கை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதனை நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் தெரிவுபடுத்தி, அவரின் கேள்விகளுக்கு தக்க பதிலளித்து, வாக்குச் சீட்டு மூலம் உங்கள் வாக்கை பதிவு செய்யலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த டுவீட்டை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பெருமையுடன் மேற்கோள் காட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய விழிப்புணர்வை ஒரு வருடத்திற்கு முன் 'சர்கார்' படக்குழுவினர் செய்துள்ளது அந்த படக்குழுவினர்களுக்கு பெருமையான ஒரு விஷயமாக கருதப்படுகிறது.

More News

துரைமுருகனை அடுத்து வசந்தகுமார்: வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் நிலையில் சமீபத்தில் துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில்

கார்த்தி-ஜோதிகா நடிக்கும் படத்தின் முக்கிய தகவல்

நடிகர் கார்த்தியும் அவருடைய அண்ணி ஜோதிகாவும் ஒரே படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர் என்பதையும் இந்த படத்தை 'த்ரிஷ்யம்' பட இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

ரிலீஸ் தேதி குறித்து 'கடாரம் கொண்டான்' படக்குழுவினர் விளக்கம்

விக்ரம், ஸ்ருதிஹாசன் நடிப்பில் எம்.ராஜேஷ் செல்வா இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகும்

தேர்தல் பிரச்சார களத்தில் விஜயகாந்த்! தொண்டர்கள் உற்சாகம்

அதிமுக கூட்டணியில் ஒருசில சர்ச்சைகளுக்கு பின் இணைந்த தேமுதிக, அக்கூட்டணியிடம் கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை ஆகிய நான்கு தொகுதிகளை பெற்றது.

தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழர்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையின்போதும் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு வாழ்த்து கூறுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே