24 மணி நேரமும் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி:  தியேட்டருக்கு பொருந்துமா?

  • IndiaGlitz, [Wednesday,June 08 2022]

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களை தற்போது பார்ப்போம்.

தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தாலும், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்பட ஒருசில காரணங்களால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அள்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் ஏற்கனவே இதுகுறித்த சட்ட மசோதாவை 2016ஆம் ஆண்டு இயற்றி இருந்தது. அதன்படி சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை 24 மணி நேரமும் திறப்பதற்கு அனுமதி அளித்திருந்தது.

ஆனால் தமிழகத்தில் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் 24 மணி நேரம் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தியேட்டருக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடைமுறை ஜூன் 5-ஆம் தேதி அமலுக்கு வரும் என்றும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த நடைமுறை அமலில் இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாரத்தில் ஒரு நாள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், பெண்களை இரவு நேரத்தில் பணியில் அமர்த்தக் கூடாது போன்ற விதிமுறைகளுடன் இந்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 

More News

ரோலக்ஸ் சாருக்கு கமல்ஹாசன் அளித்த பரிசு என்ன தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட்டாகி உள்ளது என்பதும் இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளது

'விக்ரம்' விஜய்சேதுபதி கேரக்டரில் நடிக்க இருந்தவர் இவரா? 'கட்டிங் பிளேயர்' சொன்ன ஆச்சரிய தகவல்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாசில் மட்டுமின்றி

நயன்தாராவின் மெஹந்தி நிகழ்ச்சி: விருந்தினர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டது தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நாளை காலை நடைபெற இருக்கும் நிலையில் நேற்று முதல் இந்த திருமணத்திற்கான சடங்குகள் நடைபெற தொடங்கி

சம்பளத்தில் நயன்தாராவை மிஞ்சிய நடிகை: எத்தனை கோடி தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தான் தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நயன்தாராவை மிஞ்சும் அளவுக்கு நடிகை

கோடியில் புரளும் கால்பந்து வீரரின் டிஸ்ப்ளே உடைந்த மொபைல்: என்ன காரணம் தெரியுமா?

தற்போது நடுத்தர வர்க்கத்தினர் கூட மொபைல் போனில் டிஸ்ப்ளே உடைந்துவிட்டால் உடனே அந்த மொபைல் போனை தூக்கி போட்டு விட்டு புதிய மொபைல் போனை வாங்கி கொண்டிருக்கும்