பொங்கல் விடுமுறையில், மாணவர்கள் மோடியின் சொற்பொழிவைக் கேட்க பள்ளிகளில் ஏற்பாடு..! தமிழக முதல்வர்.

வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பொங்கல் விடுமுறையில் பள்ளிக்கு வந்து பிரதமர் மோடியின் சொற்பொழிவைக் கேட்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

வருகின்ற பொங்கல், விடுமுறை தினத்தன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வந்து பாரத பிரதமர் மோடியின் சொற்பொழிவைக் கேட்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறையானது அறிவிப்பு வெளியிட்டதாக செய்திகள் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் கட்டாயமாக வர வேண்டிய அவசியம் இல்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தந்து டிவிட்டர் தளத்தில் மாணவர்கள் கட்டாயம் வர வேண்டிய அவசியம் இல்லை. வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் மோடியின் பேச்சை கேட்கும் வாய்ப்பை தவறவிடுவார்கள். எனவே அத்தகைய மாணவர்கள் பள்ளிகளில் வந்து பார்க்கலாம். அதற்கான ஏற்பாட்டை ஆசிரியர்கள் பொங்கல் விடுமுறையில் பள்ளிகளில் செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.