close
Choose your channels

கோலிவுட் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? 

Saturday, May 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்புகள் மற்றும் சின்னத்திரை சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் முடங்கியுள்ளதால் தொழிலாளர்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். இதனையடுத்து தயாரிப்பாளர்களை வேண்டுகோளை ஏற்று சமீபத்தில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்தது.
இதனை அடுத்து தற்போது ’இந்தியன் 2’ ’மாஸ்டர்’ உட்பட பல படங்களின் டப்பிங், எடிட்டிங், சவுண்ட் டிசைன், மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ஆகிய பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர்கள் வட்டாரங்களில் கூறியபோது 17ஆம் தேதி அதாவது நாளை ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் தமிழக அரசு இதுகுறித்து உரிய முடிவை எடுக்கும் என்றும் தமிழக அரசு அறிவிக்கும் சமூக இடைவெளி மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டிருப்பதாகவும், இதுகுறித்து தமிழக அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்றும் கூறி உள்ளனர்

எனவே நாளை ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் இது குறித்து ஆலோசனை செய்து படப்பிடிப்புக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.