சின்னத்திரை படப்பிடிப்பு: தமிழக அரசு அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Thursday,May 21 2020]

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன என்பதும் சின்னத்திரை மற்றும் பெரியதிரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் மற்றும் தமிழக செய்தித்துறை அமைச்சர் ஆகியோர்களிடம் திரை உலகினர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் நிபந்தனைக்கு உட்பட்டு படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து ஏற்கனவே தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டிருந்தது

இதனை அடுத்து தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் எங்களது கோரிக்கையை ஏற்று சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க தமிழக முதலமைச்சர் மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி என சின்னத்திரை சங்கங்களின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து தொலைக்காட்சிகளில் மீண்டும் சின்னத்திரை தொடர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

ஊரடங்கு நேரத்தில் அடைக்கலம் கொடுத்த நண்பனின் மனைவியுடன் ஓடிப்போன வாலிபர்

ஊரடங்கு நேரத்தில் நண்பருக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்யப் போக, தற்போது அந்த நண்பர் மனைவி குழந்தைகளை இழந்து பரிதாபமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொண்ட சில நாடுகள்!!!

கொரோனா அரக்கன் உலகின் அனைத்து மூலைகளிலும் பரந்து விரிந்து பயமுறுத்தி வந்தாலும் அதன் கோரப்பிடியில் இருந்து உலகில் சில நாடுகள் மற்றும் தீவுகள் தப்பிழைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

கொரோனா ஊரடங்கில் புதிய 50/30 சுழற்சி முறை: கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்றுமா???

லண்டனை சேர்ந்த சில பொருளாதார வல்லுநர்கள் கொரோனா ஊரடங்கிற்கு சில மாற்று வழிமுறைகளை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.

நடிப்புலக மேதைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

மலையாள திரைப்படங்களில் மட்டுமின்றி தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரிய நடிகர்களாலே நடிப்புலக மேதை

கொரோனாவால் குழந்தைகளுக்கு ஏற்படும் மர்மநோய் இந்தியாவில் முதல் முறையாக பாதிக்கப்பட்ட சென்னை சிறுவன்

கடந்த வாரம் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கவாசாகி போன்ற அறிகுறியுள்ள ஒரு நோய் தாக்குவதாக அதிர்ச்சி ஏற்படுத்தும் செய்திகள் வெளியாகியது