close
Choose your channels

திரைப்பட படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் குறித்த அரசின் அறிவிப்பு!

Sunday, June 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரைப்பட படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது என்ன என்பதை தற்போது பார்ப்போம்

தமிழகத்தில் ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு என்று அறிவித்ததோடு ஒரு சில கூடுதல் தளர்வுகளையும் வெளியிட்டு உள்ளது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் திரைப்படத் துறையினர் மிகவும் எதிர்பார்த்த படப்பிடிப்புக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இதன்படி திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 100 நபர்கள் மட்டும் பணி புரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும் என்றும், படப்பிடிப்பில் பங்கேற்கும் பணியாளர்கள் மற்றும் கலைஞர்கள் அவசியம் பரிசோதனை மேற்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் திரைப்படங்களுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

மேலும் திரையரங்குகளில் தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அடுத்த வாரம் திரையரங்குகள் திறக்கவும் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.