டாஸ்மாக்கை அடுத்து கோவில்களையும் திறக்க அரசு அதிரடி முடிவு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் மத்திய அரசும் மாநில அரசுகளும் ஊரடங்கு உத்தரவில் சிலர் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. சமீபத்தில்தான் தனிக்கடைகளைத் திறக்கலாம் என்று அறிவித்த தமிழக அரசு இன்று முதல் டாஸ்மாக்கையும் திறந்து விட்டுள்ளது

இதனை அடுத்து சற்றுமுன் கிடைத்த தகவலின் படி தமிழகத்தில் கோவில்களையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. 33% ஊழியர்களுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களை திறக்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து கோவில்களும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அனைத்து திருக்கோயில்களிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு, திருக்கோயில்களில் நோய்தடுப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் ஒரு சிலர் ஊரடங்கு உத்தரவை மீறிவிடுவதால் கோடிக்கணக்கானோர் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டில் இருந்ததற்கு அர்த்தம் இல்லாமல் போகிறது. கோயம்பேடு உள்பட பல சம்பவங்களில் ஒரு சிலர் செய்த தவறால் ஒட்டு மொத்த மாநில மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்காமல் ஓரளவு தளர்வுகளை மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தான் டாஸ்மாக் மற்றும் கோவில்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

பிறந்த குழந்தைக்கு X Æ A-12 எனப் பெயர் சூட்டிய தந்தை!!! எப்படி உச்சரிப்பது விழிப்பிதுங்கும் நெட்டிசன்கள்???

பிரபல SpaceX நிறுவனத்தின் நிர்வாகியான எலோன் மஸ்க் தனக்கும், தனது தோழியும் பிரபல பாடகியுமான கிரையம்ஸ் க்கும் மே 5 ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு ஒரு விசித்திரமான குறியீட்டு பெயரை வைத்திருக்கிறார்.

இந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் சுமார் 3000 பேர்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் சுமார் 1000 பேர்கள் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர்கள்

கொரோனா ஏப்ரல் மாதம் முதல் நாளொன்றுக்கு 80 ஆயிரம் அதிகரிக்கிறது!!! WHO அதிர்ச்சி தகவல்!!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

டாஸ்மாக்கை திறக்கும் தமிழக அரசு இதையும் திறக்கமாலாமே! நடிகை கஸ்தூரி

சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று காலை முதலே நீண்ட வரிசையில் நின்று டாஸ்மாக் கடையில் மது வாங்க குடிமகன்கள் காத்திருந்தனர்.

முழுமையான வடிவில் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அரசு அறிவிப்பு!!!

கொரோனா தடுப்பூசி பற்றி உலகின் அரை டஜன் நாடுகள் தீவிரமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன.