close
Choose your channels

மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!

Saturday, March 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தமிழக அரசு சற்றுமுன் 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவித்துள்ளது

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மார்ச் 1ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விட மார்ச் 19-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தஞ்சை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மாணவ-மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் சற்று முன் தமிழக அரசு கொரோனா அதிகரிப்பு காரணமாக வரும் 22ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளது. இதேபோல் அண்டை மாநிலமான புதுவையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 31-ஆம் தேதி வரை விடுமுறை என்றும் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.