நிதி ஒதுக்கி, குழுக்கள் அமைத்தாலும் மேகதாதுவில் எந்த காலத்திலும் அணைக்கட்ட முடியாது: துரைமுருகன் திட்டவட்டம்

  • IndiaGlitz, [Saturday,February 17 2024]

மேகதாதுவில் எந்த காலத்திலும் கர்நாடகா அணைக்கட்ட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏகாம்பரநல்லூர், கொண்டகுப்பம், வசூர், நெல்லிகுப்பம், அக்ராவரம் ஆகிய பகுதிகளில் 1 கோடியை 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டங்கள் திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், வேலூர் பொன்னை ஆற்றில் செக் டேம் கட்ட 20 கோடி மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டி இருக்கிறேன். அதேபோல் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகிறோம். குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கன மழையால் பாதிக்கப்பட்ட 701 பாலங்களை கண்டறியப்பட்டு மத்திய அரசிடம் நிதி பெற்று சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், சேர்காட்டில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. காவேரி ஆற்றில் மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக மாநில அரசு நிதியினை ஓதுக்கலாம், கமிட்டிகளை அமைக்கலாம், வேகமாக பேசி வரலாம் ஆனால் தமிழக அரசின் அனுமதில்லாமல் மேகதாது அணையில் எந்த காலத்திலும் அணை கட்ட முடியாது எனவும் அதுதான் சட்டம் அதுதான் நீதி எனவும் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதில் எங்களுக்கு கவலையில்லை என தெரிவித்தார்.

More News

விஜய், அஜீத்தின் முடிவை பார்த்து பயப்படும் திரையரங்கு உரிமையாளர்கள்.. என்ன காரணம்?

நடிகர் விஜய் மற்றும் அஜீத் ஆகியோரின் திரையுலக பயணம் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் பயப்படுவதாக பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

கோபித்து கொண்ட ரசிகர்.. 'சென்னைக்கு வா பிரதர்' என சமாதானம் செய்த ஜெயம் ரவி..!

நடிகர் ஜெயம் ரவி மீது அவரது தீவிர ரசிகர் ஒருவர் கோபித்துக் கொண்ட நிலையில் 'சென்னைக்கு வாருங்கள்' என்று அவரிடம் கூறி சமாதானம் செய்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'அமரன்' வார்த்தைக்கு என்ன அர்த்தம்? 3 பேருக்கு நன்றி சொன்ன ராஜ்குமார் பெரியசாமி..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் டைட்டில் 'அமரன்' என்று நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் நேற்று டைட்டில் உடன் வெளியான டீசர்

விஜயகுமார் பேத்தி திருமணம்.. பந்தக்கால், சுமங்கலி பூஜை.. செம்ம ரொமான்ஸ் வீடியோ..!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா திருமணம் வரும் 19ஆம் தேதி சென்னை அருகே உள்ள பீச் ரிசார்ட்டில் நடைபெற இருக்கும் நிலையில்

'எதிர்பாராததை எதிர்பாருங்கள்': அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட விஷ்ணு விஷால்..!

நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.