close
Choose your channels

சிம்பு மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு: பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை

Tuesday, January 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில், 'கட் அவுட், பாலாபிஷேகம் வேண்டாம் என்று நான் கூறியதை சிலர் கிண்டல் செய்துள்ளனர். எனக்கு இருப்பதே இரண்டு அல்லது மூன்று ரசிகர்கள்தான் என்று கூறியுள்ளனர். அதனால் அந்த இரண்டு, மூன்று ரசிகர்களுக்கு என அன்பு வேண்டுகோள். எனது ரசிகர்கள் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் ரிலீஸ் ஆகும்போது எனக்கு கட் அவுட் வையுங்கள், பாக்கெட் பால் எல்லாம் வேண்டாம், அண்டா அண்டாவா பால் ஊத்துங்க, வேற லெவலில் இந்த படத்தின் ரிலீசை கொண்டாடுங்கள்'. ஏனெனில் எனது ஒருசில ரசிகர்கள் செய்யும் இந்த செயலால் யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை' என்று நக்கலாக கூறியிருந்தார்

ஆனால் சிம்புவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியபோது, 'தனது கட்அவுட்டுக்கு அண்டாவில் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறிய நடிகர் சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.