பொங்கல் விடுமுறை ரத்து. தமிழர்களுக்கு மத்திய அரசின் தொடர் துரோகம்

  • IndiaGlitz, [Monday,January 09 2017]

பொங்கல் பண்டிகை என்பது காலங்காலமாக தமிழர்கள் கொண்டாடி வரும் தமிழ் கலாச்சார பண்டிகை. உழவர்களுக்கு நன்றி சொல்லும் விழாவாக ஜாதி, மதம், இன வேறுபாடு இன்றி அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து கொண்டாடப்பட்டு வரும் இந்த பொங்கல் திருவிழாவுக்கு தமிழக அரசு பொங்கல், மாட்டுப்பொங்கல், உழவர் தினம் என மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கும்.

இதேபோல் மத்திய அரசும் கடந்த ஆண்டு வரை பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளித்து வந்தது. ஆனால் இந்த வருடம் திடீரென நாடு முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு அரசு விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டியதில்லை என அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழர்களுக்கு மாபெரும் அதிர்ச்சியாக உள்ளது.

ஏற்கனவே பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இந்த தடையை ஒரே ஒரு அவசர சட்டம் இயற்றினால் உடைத்துவிடலாம். ஆனால் அதற்கு மனமில்லாத மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நீலிக்கண்ணீர் வடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது விடுமுறையிலும் கைவைத்துள்ளது கோடானகோடி தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்வதாகவே கருதப்படுகிறது.

பொங்கல் என்பது ஒரு மதப்பண்டிகை இல்லை என்பதை மனதில் வைத்து மீண்டும் பொங்கல் தினத்தில் விடுமுறை என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

More News

'பைரவா' ரிலீஸால் அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்?

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தை பொங்கல் பண்டிகையுடன் சேர்த்து பிரமாண்டமாக கொண்டாட விஜய் ரசிகர்கள் தயாராக உள்ளனர்

பிரபல இயக்குனர் தான் ஓரினசேர்கையாளர் என்று பகிரங்க ஒப்புதல்

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண்ஜோஹரின் செக்ஸ் வாழ்க்கை குறித்து கடந்த பல வருடங்களாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்து அவரை வெறுப்பேற்றுவது உண்டு.

விஜய் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய தல ரசிகர்களின் கட்-அவுட்

இளையதளபதி விஜய்யும், தல அஜித்தும் கோலிவுட் திரையுலகில் தொழில்முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள்...

முடிவுக்கு வந்தது பெட்ரோல் பங்க் - டெபிட் கார்டு பிரச்சனை

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு வங்கிகள் 1 சதவீதம் சேவை வரி விகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அதிகாலை முதல் பெட்ரோல் நிலையங்களில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தமிழ்நாடு பெட்ரோல் நிலைய முகவர்கள் சங்கம் நேற்று அறிவித்திருந்தது.

ஜல்லிக்கட்டு தமிழக கலாச்சாரத்தின் ஒரு பகுதி. சூர்யா

பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க ஜல்லிக்கட்டுவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது