கனடாவில் படித்து வந்த தமிழக மாணவி மீது மர்ம மனிதன் தாக்குதல்: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,January 24 2020]

தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி ஒருவர் கனடாவில் படித்துக்கொண்டிருந்தபோது அவரை மர்ம மனிதன் ஒருவன் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மர்ம மனிதன் ஒருவன் அவரை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளதாக தெரிகிறது. இதனை சற்று தூரத்திலிருந்து பார்த்த மாணவர் ஒருவர் உடனடியாக அருகில் வந்து அந்த படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்க உதவியுள்ளார்.

இதுகுறித்து டொரண்டோ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மாணவியை தாக்கிய மர்ம மனிதன் ஆசியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் வயது சுமார் 20 என்றும் அடையாளம் கூறியுள்ளனர். இந்த மர்ம மனிதனை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி செய்ய வேண்டுமென கனடா போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து மாணவியின் பெற்றோர் உடனடியாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் தெரிவித்து மாணவிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து காயமடைந்த மாணவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க கனடா அரசுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபுதேவாவின் 'பொன்மாணிக்கவேல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபுதேவா நடிப்பில் முகில் செல்லப்பன் இயக்கிய 'பொன்மாணிக்கவேல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே

நடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு தீர்ப்பு: 

நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

சினேகா வீட்டிற்கு வந்த புதுவரவு: குடும்பத்தினர் மகிழ்ச்சி

சமீபத்தில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகை சினேகாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவருடைய கணவரும்

கொரோனா வைராஸால் பாதிக்கப் பட்டாரா? கேரள நர்ஸ் – சவுதி சுகாதார அதிகாரி தகவல்

முன்னதாக, தென்மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு செவிலி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை

பிரபல தமிழ் இயக்குனர் விபத்தில் சிக்கி காயம்: மருத்துவமனையில் அனுமதி!

பிரபல தமிழ் இயக்குனர் ஒருவருக்கு இன்று காலை விபத்து ஏற்பட்டு கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது