பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்! போக்குவரத்து ஊழியர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Tuesday,May 16 2017]

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து நம்பிக்கையுடன் இரவு நேர பேருந்துகளில் ஏற முடியவில்லை என்றும் நடுவழியில் திடீரென போராட்டக்காரர்கள் பேருந்துகளை நிறுத்துவதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த தொடர் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மதுரை, ஒத்தக்கடையை சேர்ந்த செந்தில் குமரய்யா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் அமர்வு, 'போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், போராட்டம் செய்வது தவறல்ல, ஆனால் தொடர் வேலைநிறுத்தம் செய்வதால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் காரணமாக போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். அப்படி பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நீதிபதிகளின் இந்த உத்தரவை அடுத்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

உங்களுக்கு பொய்யே பேச வராதே! நீங்க எப்படி அரசியலுக்கு? ரஜினிக்கு பிரபல இயக்குனர் கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அரசியல் குறித்து பேசும்போது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பு ஏற்படும்.

தற்காலிக ஓட்டுனர் ஏற்படுத்திய விபத்தால் இளம்பெண் மரணம். பொதுமக்களின் உயிருக்கு என்ன பாதுகாப்பு?

போக்குவரத்து ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

24 மணி நேர இடைவெளியில் இரட்டை விருந்து தரும் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் 'டோரா' திரைப்படம் வெளியான நிலையில் அவர் தற்போது 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம்', 'வேலைக்காரன்' மற்றும் 'அறம்' ஆகிய நான்கு தமிழ்ப்படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்...

ரஜினியை மிரட்டவே ப.சிதம்பரம் வீட்டில் சோதனை: கராத்தே தியாகராஜன்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர்களின் சென்னை நுங்கம்பாக்கம் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இந்தியாவில் உள்ள பல இடங்களில் ஒரே நேரத்தில் இன்று காலை முதல் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது...

என்னால நிற்க முடியவில்லை. ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று இரண்டாவது நாளாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது.