close
Choose your channels

கொரோனா வைரஸ் எதிரொலி: மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு

Sunday, March 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மின் கணக்கீடு எடுக்கப்பட்ட வீடுகளுக்கு புது கட்டணமும், கணக்கீடு எடுக்கப்படாத வீடுகளுக்கு முந்தைய மாத கட்டணமும் வசூலிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது

மேலும் நேரடியாக வந்து மின் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டுமென்றும் மின் கட்டணம் செலுத்த ஆன்லைன் முறையை பயன்படுத்த வேண்டும் என்றும் மின்சார வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது

மின்கட்டணம் செலுத்த இணையதளம் மற்றும் பல செயலிகள் மூலம் வசதிகள் இருப்பதால் இந்த ஒரு மாதம் மட்டும் அனைவரும் டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தினால் மின்சார அலுவலகத்தில் கூட்டத்தை தவிர்க்கலாம் என்று மின்சார வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. மேலும் மின்கட்டணம் செலுத்த கடைசி தேதியில் மாற்றம் இருக்குமா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.