close
Choose your channels

தமிழகத்தில் இன்று 25 பாசிட்டிவ் மட்டுமே, விரைவில் கொரோனாயில்லா மாநிலம்: முதல்வர் நம்பிக்கை

Thursday, April 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனாவால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் 50க்கு மேல் இருந்து வந்தது என்பதும், ஒருசில நாட்களில் 100க்கும் மேல் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. ஆனால் தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் கொடுத்த ஒத்துழைப்பு ஆகியவை காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது

நேற்று முன்தினம் 31 பேர், நேற்று 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 25 பேர் மட்டுமே புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளதால் தமிழகத்தில் கொரொனாவுக்கு இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவிடும் என்றும் ஒரு சில நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற அளவுக்கு வந்துவிடும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.