close
Choose your channels

தமிழகத்தில் இன்று 43 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: சுகாதாரத்துறை தகவல்

Monday, April 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1520ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் இவர்களில் ஒருவர் மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இருவரையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 6109 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், மொத்தம் 41,710 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதேபோல் இன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46 என்றும் இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 457 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.