தமிழகத்தில் இன்று மேலும் அதிகரித்த கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை சுகாதாரத்துறை தினமும் தெரிவித்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக 50க்கும் குறைவாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தால் பொதுமக்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டு இருந்தது.

ஆனால் இன்று திடீரென தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 56 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து சென்னையில் மட்டும் மொத்தம் 228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை சற்றுமுன் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து 283 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்பதால் மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இதுவரை தமிழகத்தில் 29676 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா வார்டில் 1891 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது