close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்: இன்று ஒருவர் வெளியேறுகிறார்

Monday, September 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் பாலாஜி மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் வெளியேறிவிட்ட நிலையில் இறுதி போட்டியில் ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நால்வர் உள்ளனர். இவர்களில் ஒருவர்தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்று நினைத்து கொண்டிருந்தோம்.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் போட்டியாளர்களில் வெளியேறிய வைஷ்ணவி மற்றும் ரம்யா உள்ளே வந்துள்ளனர். இவர்கள் கூறும் தகவலின்படி இன்று ஒருவர் வெளியேறவுள்ளதாக தெரிகிறது.

நேற்று இரவு முதலே பிக்பாஸ் வின்னருக்கான வாக்குகள் பதிவாகி வரும் நிலையில் விஜய் டிவி, பதிவாகும் வாக்குகளை அவ்வப்போது சேனலில் காட்டி வருகிறது. அந்த வகையில் சற்றுமுன் வரை ரித்விகா 11 லட்சம் வாக்குகளை தாண்டிவிட்டார். அவருக்கு அடுத்த இடத்தில் ஐஸ்வர்யாவும், ஜனனி கடைசி இடத்திலும் உள்ளார்.

எனவே கடைசி இடத்தில் உள்ள ஜனனிக்கும் முதலிடத்தில் உள்ள ரித்விகாவிற்கும் இடையே வித்தியாசம் மிக அதிகம் இருப்பதால் இன்று ஜனனி வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.