close
Choose your channels

மரக்கூண்டில் இரண்டு குழந்தைகளை அடைத்து வைத்த இரக்கமில்லா பெற்றோர் கைது!

Wednesday, April 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெற்ற குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பாக வளர்க்கும் பெற்றோர்கள் மத்தியில் ஒருசில பெற்றோர்கள் சைக்கோத்தனமாக பெற்ற குழந்தைகளை கொடுமைப்படுத்தும் செய்திகள் தற்போது அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் கலிபோர்னியாவை சேர்ந்த ரமோன் ஜெண்டிஜாஸ் மற்றும் மெர்க்காடீஸ் வில்லியம்ஸ் தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளை ஒரு மரக்கூண்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதற்காகவே பிரத்யேகமாக மரத்தாலான ஒரு கூண்டை தயார் செய்து அதை போல்ட்-நட் போட்டு டைட் செய்து அதில் இரண்டு குழந்தைகளையும் அடுக்கடுக்காக சிறை வைத்துள்ளனர். இவ்வளவிற்கும் இரண்டு குழந்தைகளுக்கும் இரண்டு வயதுக்கும் குறைவாகவே இருக்கும் என்பது கொடுமையிலும் கொடுமை

இந்த நிலையில் அந்த வீட்டில் சந்தேகத்துக்கு இடமான சத்தம் வந்ததால் உள்ளே நுழைந்து சோதனை செய்த போலீசார், குழந்தைகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து குழந்தைகளை கொடுமைப்படுத்தும் சட்டப்பிரிவின்படி தம்பதிகளை கைது செய்த போலீசார், அந்த இரண்டு குழந்தைகளையும் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.