close
Choose your channels

ஒரே ஊரில் இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்திய சுற்றுலாத்துறை மேலாளர்!

Tuesday, July 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே ஊரில் வெவேறு வீடுகளில் இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்திய சுற்றுலாத்துறை மேலாளர் திடீரென தலைமறைவாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு ஹோட்டலில் மேலாளராக யுவராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு சென்னையில் இருந்து சமீபத்தில் ராமேஸ்வரத்திற்கு பணிமாறுதல் கிடைத்தது. இதனையடுத்து அவர் மனைவி ரேகா மற்றும் குழந்தையுடன் ராமேஸ்வரத்தில் ஒரு வாடகை வீட்டில் குடிபெயர்ந்தார்.

இந்த நிலையில் சென்னை அலுவலகத்தில் யுவராஜ் பணிபுரிந்தபோது அவருக்கும் கவிதா என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இரண்டு குழந்தைகளுடன் இருந்த கவிதாவையும் ராமேஸ்வரம் அழைத்து வந்து தான் பணிபுரியும் ஓட்டல் வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்க வைத்தார். சக ஊழியர்களிடம் கவிதாவை தனது மனைவி என அறிமுகம் செய்தார்.

இந்த நிலையில் ஒருநாள் தற்செயலாக தமிழ்நாடு ஓட்டலுக்கு ரேகா வந்தபோதுதான் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் யுவராஜ், கவிதாவுடன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுல்லாத்துறை யுவராஜை சஸ்பெண்ட் செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.