'வாரணம் ஆயிரம்' படத்தை 100 முறை பார்த்த பையன் அழுகுறான்: சூர்யா குறித்து 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


’வாரணம் ஆயிரம்’ படத்தை 100 முறை பார்த்தேன், அந்த ஃபேன்பாய் பையன் அழுது கொண்டிருக்கிறான்" என்று சூர்யாவுடனான சந்திப்பு குறித்து 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜிவிந்த் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மே 1-ஆம் தேதி வெளியான சசிகுமார், சிம்ரன் நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் 75 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜிவிந்த்துக்கு பல திரையுலக பிரபலங்கள் பாராட்டியிருந்த நிலையில், தற்போது சூர்யா அவரை நேரில் அழைத்து தன்னுடைய பாராட்டை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அபிஷன் ஜிவிந்த் தனது சமூக வலைதளத்தில், "இதை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்குள் இருந்த ஏதோ ஒன்று இன்று குணமாகிவிட்டதாக கருதுகிறேன். சூர்யா அவர்கள் என்னை அழைத்து 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படத்தை பார்த்து எவ்வளவு ரசித்தேன் என்பதை கூறினார்.
'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தை 100 முறை பார்த்த ஒரு பையன் இன்று நன்றி உணர்வில் இருக்கிறான். அவன் எப்போதும் நன்றி உணர்வில் அழுது கொண்டே இருக்கிறான். நன்றி, சூர்யா அவர்களே!' என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
don’t know how to explain it… but something inside me healed today. @Suriya_offl sir called my name and said how much he liked #touristfamily 🤍
— Abishan Jeevinth (@Abishanjeevinth) May 23, 2025
There’s a boy in me still watching v1000 for the 100th time. Today, that boy is crying with gratitude. Thank you sir 🤗 pic.twitter.com/WIbZo5kpUh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments