டி.ஆர் பாலு, கனிமொழி, ஆ.ராசாவுக்கு புதிய பதவி: விரிவான தகவல்

  • IndiaGlitz, [Saturday,May 25 2019]

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. திமுக மட்டுமே 23 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை திமுக குழுத் தலைவராக டி.ஆர். பாலு தேர்வு செய்யப்பட்டார். மக்களவைக்கு 6 முறையும் மாநிலங்களவைக்கு ஒருமுறையும் தேர்வு செய்யப்பட்ட டி.ஆர்.பாலு, இம்முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

மேலும் மக்களவை திமுக குழு துணைத்தலைவராக கனிமொழியும், திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் தேர்வு செய்யப்பட்டனர்.