close
Choose your channels

போதை பத்தல… சாராயத்தில் சானிடைசரை கலந்து குடித்ததால் வந்த விபரீதம்!!!

Friday, July 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போதை பத்தல… சாராயத்தில் சானிடைசரை கலந்து குடித்ததால் வந்த விபரீதம்!!!

 

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் போதை பற்றாமல் தன்னார்வலர்கள் கொடுத்த சானிடைசரை சாராயத்தில் கலந்து குடித்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது என்றும் இதில் 20 க்கும் மேற்பட்டோர் சாராயத்தில் சானிடைசரை கலந்து குடித்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் உடல் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளில் பலர் அனுமதிக்கப் பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

நேற்று 3 பேர் உயிரிழந்ததாகவும் இன்று காலை 6 பேர் உயிரிழந்தாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன. இச்சம்பவத்தால் இதுவரை 10 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது சாராய விற்பனையில் பலர் திருட்டுத் தனமாக ஈடுபட்டு வருவதாகவும் அம்மாநில செய்திகள் தெரிவிக்கின்றன. சாராயம் கிடைத்தும் போதைப் பற்றாமல் அதில் சானிடைசரைக் கலந்து கொடுத்த விவகாரம் உயிருக்கே உலை வைத்து இருக்கிறது. 20 மேற்பட்டோர் சானிடைசரை குடித்த நிலையில் 10 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். மற்றவர்களின் நிலைமை குறித்தும் கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.