close
Choose your channels

சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதம் நடந்தால்? பழங்குடியின மக்கள் எச்சரிக்கை!

Monday, November 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவுக்கு எதிராக ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பாம்பை கொண்டு எறிவோம் என பழங்குடியினர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ஒரு பக்கம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இன்னொரு பக்கம் ஒரு சில சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு தங்களது முழு ஆதரவை கொடுத்துள்ள தமிழ்நாடு பழங்குடி நாடோடி கூட்டமைப்பு இன்று மதுரை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தங்கள் இன மக்களுக்கு நடக்கும் அநீதிகளையும் துயரங்களையும் சிறப்பாக காட்சிப்படுத்திய நடிகர் சூர்யாவுக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுக்கள் என்றும் தமிழகம் முழுவதும் பழங்குடியின மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் செய்து வரும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தனர். அதேபோல் பழங்குடியின மக்களுக்காக வாதாடி வெற்றி பெற்ற நீதியரசர் சந்துரு அவர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்

இதனை அடுத்து நடிகர் சூர்யாவுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்கள் மீது பாம்பை கொண்டு எறிவோம் என்றும் ஆவேசமாக அவர்கள் கூறினர். முன்னதாக பழங்குடியின மக்கள் போராட்டத்தின்போது தங்கள் கைகளில் எலி, பாம்பு ஆகியவற்றை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.