மொபைல் போன் சிக்னலுக்காக மலை உச்சியில் தங்கைக்கு குடிசை போட்டுக் கொடுத்த அண்ணன்!

  • IndiaGlitz, [Sunday,August 23 2020]

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருப்பதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகின்றன. பல இடங்களில் மொபைல் ஃபோன் டவர் கிடைக்கவில்லை என்பது மாணவர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கலாகும். இந்த நிலையில் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு அவரது சகோதரர் மொபைல் போன் சிக்னல் கிடைக்க வேண்டும் என்பதற்காக மலை உச்சியில் ஒரு குடிசை போட்டுக் கொடுத்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பழங்குடி வகுப்பைச் சேர்ந்த சுனிதா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண் எடுத்து உள்ளார். அவர் தற்போது எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு தயார் செய்து வருகிறார். அவரது வீட்டில் மொபைல் போன் டவர் சுத்தமாக கிடைக்கவில்லை என்பதால் அவரது சகோதரர் அருகிலுள்ள மலை உச்சியில் ஒரு சின்ன குடிசை போட்டுக் கொடுத்துள்ளார்.

அந்த குடிசையில் தான் அந்த மாணவி தற்போது மருத்துவ நுழைவு படிப்பிற்கான தேர்வான நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அந்த குடிசையின் உட்கார்ந்து அந்த மாணவி பாடங்களை படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

மகன்களுடன் மொட்டை மாடியில் விளையாடும் தனுஷ்: வைரலாகும் புகைப்படம்

கொரோனா லாக்டவுன் நேரத்தில் பிசியாக இருக்கும் பல நடிகர் நடிகைகள் கடந்த நான்கு மாதங்களாக வீட்டில் சும்மாவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்புக்கு அனுமதி எதிரொலி: பிரமாண்ட படத்தின் படப்பிடிப்பு தேதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இந்தியா முழுவதும் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்த பிசி ஸ்ரீராம்: ஏன் தெரியுமா?

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலேயே புகழ் பெற்றவர்கள் பட்டியலில் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் பிசி ஸ்ரீராம் ஆகிய இருவருக்கும் இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சூரரை போற்று படத்திற்கு அமேசான் கொடுத்த தொகை எவ்வளவு?

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம், திரையரங்குகள் திறக்காத காரணத்தினால் வேறு வழியின்றி ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியிடுவதாகவும்,

குறுகிய காலத்தில் பிரபலமாக சீரியல் நடிகை செய்த விபரீதம்: தற்கொலையில் முடிந்ததால் பரபரப்பு

குறுகிய காலத்தில் பிரபலமாக சீரியல் நடிகை ஒருவர் செய்த விபரீத முயற்சி, அவரை தற்கொலை வரை கொண்டு போய் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது