பெயரில்லாத, அடையாளமற்ற கோழைகளே.. த்ரிஷாவின் ஆவேசமான பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயர் இல்லாத அடையாளமற்ற கோழைகளே என தன்னை போலியான அக்கவுண்ட்களில் இருந்து நெகட்டிவ் விமர்சனம் செய்பவர்களை குறிப்பிடும் வகையில் ஆவேசமாக பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகி ஆக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார் என்பதும் இப்போது கூட அவர் அஜித், விஜய், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்கள் உடன் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசமாக ஒரு பதிவை தெரிவித்துள்ளார், அதில் ஷபா....... டாக்ஸிக்கான மக்களே ஏன் இப்படி வாழ்கிறீர்கள்? நிம்மதியாக தூங்குகிறீர்களா இல்லையா? சமூக வலைதளத்தில் இருந்து கொண்டு மற்றவர்களை பற்றி மோசமான கருத்துக்களை தெரிவிப்பது தான் உங்களது அன்றாட வேலையா? உங்களுடனும் உங்களை சுற்றி உள்ளவர்களை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது? பெயர் மற்றும் அடையாளம் இல்லாத நீங்கள் நிச்சயமாக கோழைகளாக தான் இருப்பீர்கள். கடவுள் உங்களுக்கு அருள் கொடுக்கட்டும்’ என்று பதிவு செய்துள்ளார். த்ரிஷாவின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com