close
Choose your channels

உஸ்பெகிஸ்தானில் த்ரிஷாவின் அடுத்த பட படப்பிடிப்பு!

Thursday, May 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2', மற்றும் 'பரமபத விளையாட்டு' ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் அடுத்தடுத்த இந்த படங்கள் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் லைகாவின் தயாரிப்பில் 'எங்கேயும் எப்போதும்' இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமானார். 'ராங்கி' என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் உஸ்பெகிஸ்தான் செல்லவுள்ளனர். அங்கு சில முக்கிய ஆக்சன் காட்சிகளும் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்படவுள்ளதாம்.

டைட்டிலுக்கு ஏற்ற வகையில் த்ரிஷா இந்த படத்தில் ஒரு தைரியமான பெண் கேரக்டரில் நடித்து வருகிறார். 'எங்கேயும் எப்போதும்', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களுக்கு இசையமைத்த சத்யாவின் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு சுபார்க் படத்தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.