close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின்போது த்ரிஷாவுக்கு காயமா? அதிர்ச்சி தகவல்!

Tuesday, October 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் மொத்தம் 500 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவருமே தங்கள் கேரக்டரில் ஒன்றி தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக குந்தவை கேரக்டரில் நடித்த த்ரிஷாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தது என்பதும் நாவலில் படித்த குந்தவை கேரக்டரை த்ரிஷா நம் கண்முன் திரையில் தோன்றியதை அனைவரும் ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பின்போது த்ரிஷாவுக்கு காயம் ஏற்பட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். ஒரு முக்கிய காட்சியின் படப்பிடிப்பின்போது தனக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக அருகில் நின்றிருந்த சோபியாவுக்கு காதில் ரத்தம் வந்தது என்றும் அவர் தெரிவித்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் காயத்தை பொருட்படுத்தாமல் தான் தொடர்ந்து நடித்ததாகவும் த்ரிஷா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் த்ரிஷா ஆக்ஷன் காட்சிகளில் நடித்து உள்ளார் என்றும் அவர் குதிரை சவாரியும் செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காட்சிகளெல்லாம் முதல் பாகத்தில் இல்லாததால் இரண்டாம் பாகத்தில் த்ரிஷாவின் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.