கீர்த்தி சுரேஷூக்காக இணையும் த்ரிஷா, சமந்தா, மஞ்சுவாரியர், டாப்சி

  • IndiaGlitz, [Sunday,June 07 2020]

நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் அதன் பின்னர் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் அதிகம் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் அவர் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ’பெங்குயின்’ இந்த திரைப்படம் வரும் 19ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த ’பெங்குயின்’ படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழி டீசர்களை நான்கு முன்னணி நடிகைகள் வெளியிட உள்ளனர். தமிழில் நடிகை த்ரிஷாவும் மலையாளத்தில் நடிகை மஞ்சுவாரியரும், தெலுங்கு நடிகை சமந்தாவும், ஹிந்தியில் நடிகை டாப்ஸியும் நாளை மதியம் சரியாக 12 மணிக்கு இந்த வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷின் படத்திற்காக நான்கு முன்னணி நடிகைகள் இணைந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஈஸ்வர் கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார் மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பதும், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் அனில் கிரிஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

தினந்தோறும் புதிய உச்சம்: இன்று தமிழகத்தில் 1500க்கும் மேல் கொரோனா பாதிப்பு

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் 1400க்கும் மேற்பட்டவர்களும், கடந்த ஒரு வாரமாக சென்னையில் 1000க்கும் மேற்பட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்

எனது உயிர்‌ மூச்சு இருக்கும்‌ வரை அதிமுக தொண்டனாக இருப்பேன்: பிரபல இயக்குனர் அறிக்கை

'இங்கிலீஷ்காரன்‌', 'மகாநடிகன்‌', 'சார்லி சாப்ளின்‌' உட்பட 20க்கும்‌ மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி, தயாரித்துள்ள பிரபல திரைப்பட இயக்குனர்‌ ஷக்தி சிதம்பரம்‌ தற்போது யோகிபாபு நடிக்கும்‌ 'பேய்மாமா'

மாஸ்க் அணியாததால் தனக்குத்தானே அபராதம் விதித்து கொண்ட போலீஸ் ஐஜி

மாஸ்க் அணியாததால் தனக்குத்தானே ரூ.100 அபராதம் விதித்து கொண்ட போலீஸ் அதிகாரி ஐஜி அவர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மருத்துவ பில் கட்டாததால் கட்டிலோடு கட்டி வைக்கப்பட்ட முதியவர்: அதிர்ச்சி தகவல்

80 வயது முதியவர் ஒருவர் மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக கட்டிலோடு கட்டி வைக்கப்பட்ட சம்பவம்

நடிகை சாயிஷா கர்ப்பமா? அவரே வெளியிட்ட விளக்கம்

பிரபல நடிகர் ஆர்யாவை நடிகை சாயிஷா கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது அவர் தமிழில் 'டெடி' என்ற திரைப்படத்திலும்