close
Choose your channels

'லியோ' காஷ்மீர் படப்பிடிப்பில் இருந்து த்ரிஷா திரும்பவில்லை.. சொன்னது யார் தெரியுமா?

Tuesday, February 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்துவரும் ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்புக்கு விஜய் உடன் சென்றிருந்த த்ரிஷா 3 நாட்களில் சென்னை திரும்பி விட்டதாக கூறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து த்ரிஷாவுக்கு இந்த படத்தில் சின்ன கேரக்டர் தான் என்றும் அவரது கேரக்டரை லோகேஷ் கனகராஜ் கொன்றுவிட்டார் என்றும் பிரியா ஆனந்த் தான் இந்த படத்தின் நிஜ நாயகி என்றும் நெட்டிசன்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது காஷ்மீர் படப்பிடிப்பிலிருந்து த்ரிஷா இன்னும் திரும்பவில்லை என்றும் தற்போது அவர் காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்பில் தான் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து த்ரிஷா சென்னை திரும்பியதாக வெளிவந்திருக்கும் வீடியோ பழையது என்று தெரிய வந்துள்ளது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.