கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த நடிகை த்ரிஷா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை த்ரிஷா, கொரோனா விழிப்புணர்வு குறித்தும், கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் நம்மை பாதிக்காமல் இருக்க தடுத்துக் கொள்ள முடியும். அதற்கு நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

உங்களுக்கு இருமல் அல்லது தும்மல் வந்தால் உடனே கர்சீப் அல்லது டிஷ்யூ பேப்பர் எடுத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும். பயன்படுத்தப்பட்ட டிஷ்யூ பேப்பர்களை குப்பைத் தொட்டியில் போட்டு மூட வேண்டும்

உங்கள் கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தேவையில்லாமல் தொடக்கூடாது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்

அதிக கூட்டமாக இருக்கும் இடத்தில் இருப்பதை தவிர்க்கவும். உங்களுக்கு இருமல் அல்லது காய்ச்சல் இருந்தால் அல்லது மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தால் மற்றவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும். மேலும் உடனே உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் சுகாதார மையத்தை அல்லது மருத்துவரிடம் சென்று பார்க்க வேண்டும். அப்போது முக கவசம் போட்டுக் கொள்ள வேண்டும்

மேலும் விவரங்கள் தமிழ்நாடு பொது சுகாதார மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகை திரிஷா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத்திற்கு கொரோனா அறிகுறி!!! மலேசிய நிலவரம்!!!

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைச் சந்தித்தப் பின் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி

கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 245,834 பேருக்கு நோய் தொற்று இருப்ப

ரஜினியை அடுத்து தமிழக அமைச்சரை பாராட்டிய 'அண்ணாத்த' நாயகி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாத வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,

நிர்பயா குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து விஜய் தந்தை கருத்து

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு இன்று காலை தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த தண்டனை குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் கூறியதாவது:

கொரோனா வைரஸால் அவன் செத்துவிடுவான்: நடிகை கஸ்தூரி சாபம்

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு குற்றவாளிகளில் நான்கு பேர் சற்றுமுன் தூக்கிலிடப்பட்டனர்.