close
Choose your channels

மூன்றே நாளில் காஷ்மீரில் இருந்து திரும்பிய த்ரிஷா.. இதுதான் காரணமோ?

Monday, February 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய், த்ரிஷா உள்பட ’லியோ’ படத்தின் குழுவினர் காஷ்மீருக்கு படப்பிடிப்புக்காக சென்ற நிலையில் தற்போது த்ரிஷா மூன்றே நாட்களில் சென்னை திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய்யின் 67வது படமான ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் உட்படுத்தாமல் விஜய் உட்பட பட குழுவினர் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் பட குழுவினர்களுடன் காஷ்மீர் சென்ற த்ரிஷா மூன்றே நாள்களில் சென்னை திரும்பி விட்டதாகவும் அவருடன் இந்த படத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரமும் திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சென்னையில் விமானத்தில் த்ரிஷா வந்து இறங்கிய புகைப்படங்களும் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

மூன்றே நாட்களில் த்ரிஷா திரும்பி விட்டதை அடுத்து அவருக்கு இந்த படத்தில் சின்ன கேரக்டர் தானா? அல்லது ’விக்ரம்’ படத்தில் நடித்த நடிகை காயத்ரி கேரக்டர் போல் த்ரிஷாவின் கேரக்டரையும் லோகேஷ் கனகராஜ் கொன்றுவிட்டாரா என்று கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பிலும் த்ரிஷா கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரியா ஆனந்த் தொடர்ந்து காஷ்மீரிலேயே இருப்பதால் அவருக்கு த்ரிஷா விட முக்கிய கேரக்டராக இருக்குமோ என்ற சந்தேகம் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.