close
Choose your channels

H-1B விசாக்களில் சிறு தளர்வு– அமெரிக்க வெளியுறவுத் துறையின் புதிய அறிவிப்பு!!!

Thursday, August 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜுன் 22 ஆம் தேதி H-1B விசாக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அமெரிக்காவில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வேலைகளைப் பார்ப்பதற்கு அமெரிக்க அரசு இந்த H-1B விசாக்களை வழங்குகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் கடுமையான பொருளதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. அமெரிக்க நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளை சொந்த நாட்டு மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்ற அடிப்படையில் H-1B விசாக்களுக்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதாக அதிபர் ட்ரம்ப் கருத்துக் கூறியிருந்தார்.

அதன்படி இந்த ஆண்டு இறுதிவரை H-1B விசாக்களுக்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் பொறியியல் சார்ந்த பட்டப்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்க செல்லும் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளுக்கு தடை ஏற்படும் எனக் கூறப்பட்டது. ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் உட்பட பல வல்லுநர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தற்போது அமெரிக்காவின் வெளியுறவுத்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இந்த அறிவிப்பில் ஏற்கனவே H-1B விசாக்கள் மூலம் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றியிருந்தால் அவர்கள் மீண்டும் H-1B விசாக்களைப் பெற்று அமெரிக்காவிற்கு வந்து பணியாற்றலாம். ஆனால் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய நிறுவனத்தில் பணியாற்ற விரும்பினால் மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. H-1B விசா பெறுபவரின் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை அழைத்து வருவதிலும் எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.