close
Choose your channels

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு all is well சொன்ன டிரம்ப்...!

Wednesday, January 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு all is well சொன்ன டிரம்ப்...!

இராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் வைத்து, இரான் ராணுவப்படை தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் நடத்திக் கொன்றது அமெரிக்கா. அவர், அமெரிக்கர்களைத் துன்புறுத்தியதாகவும் அமெரிக்காவுக்கு எதிராகப் பல சதிகளை நடத்தியதாகவும் சுலைமானியின் கொலைக்குக் காரணம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சுலைமானியின் கொலையினால் இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரான், இராக் ஆகிய இரு நாடுகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில், கிழக்கு இராக்கில் உள்ள அல்- அசாத் ராணுவத் தளம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த ராணுவத் தளம் அமெரிக்காவுடையது என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ எல்லாம் நன்றாகவே உள்ளது. இராக்கில் உள்ள இரண்டு ராணுவத் தளங்கள்மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிர்ச்சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. உலகிலேயே சக்தி வாய்ந்த மற்றும் சிறந்த ஆயுதங்கள் கொண்ட ராணுவம் எங்களிடம் உள்ளது. இதுகுறித்து நாளை காலை அறிக்கை வெளியிடுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.