நாட்டை விட்டே வெளியேறி விடுவேன்… எதிர்க்கட்சியினரை நோக்கி சாவல் விடும் அதிபர் ட்ரம்ப்!!!

 

வருகிற நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ஒருவேளை இத்தேர்தலில் நான் தோற்றால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார். காரணம் நான் ஒரு தகுதியில்லாத நபருடன் போட்டியிடுகிறேன் எனக்கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அமெரிக்காவில் பிரச்சாரங்கள் சூடுபிடித்து இருக்கின்றன. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இருக்கட்சி வேட்பாளர்களும் நேருக்கு நேராக மற்றவர்கள்மீது குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஜார்ஜாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், நான் தோற்றுப் போனால் நாட்டை விட்டு வெளியேறுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மேலும் “வரலாற்றிலேயே மிகவும் மோசமான வேட்பாளருடன் போட்டியிடுகிறேன். ஒருவேளை அவரிடம் தோற்றுவிட்டால் எனது வாழ்க்கை வீண் என்று நாட்டை விட்டு வெளியேறுவதே நல்லது என்று கருதுகிறேன். அப்படி நடந்தால் நான் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன். தேர்தலில் தோற்றால் நான் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம். அதுபற்றி எனக்கு தெரியவில்லை.

ஜோ பிடன் குடும்பம் ஒரு கிரிமினல் நிறுவனம் போன்றது. ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவையே கம்யூனிஸ்ட் நாடாக மாற்ற விரும்புகிறார்கள். அவர்களிடம் ஒன்றுமே இல்லை. உங்களது மதிப்புகள் மீது வெறுப்புகள் இருக்கிறது. இந்த செல்வந்த தாராளவாத நயவஞ்சகர்களுக்கு நாம் ஒரு செய்தியை அனுப்ப வேண்டிய நேரம் இது’‘ எனப் பரபரப்பாக பேசியிருக்கிறார் அதிபர் ட்ரம்ப். 

More News

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை – ராஜஸ்தான்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37 ஆவது லீக் போட்டியில் மிகவும் இக்கட்டான நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

'நம்ம வீட்டு பிள்ளை' நாயகிக்கு கிடைத்த மெகா பட்ஜெட் பட வாய்ப்பு!

நடிகர்கள் சித்தார்த் மற்றும் சர்வானந்த் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் தகவலை சமீபத்தில் பார்த்தோம். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ஒரு நாயகியாக அதிதி ராவ் ஹைத்ரி நடிக்க ஒப்பந்தம் ஆனார்

நீட் தேர்வில் சாதனை: சத்தியத்தை நிறைவேற்றிய சபரிமாலா 

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற மன உளைச்சலில் அரியலூர் அனிதா கடந்த 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்றைய நாமினேஷனில் சிக்கிய எதிர்பாராத இருவர் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்களை முடிவு செய்ய நாமினேசன் செய்யப்படுவது வழக்கம்

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் 4 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகத் தமிழகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.