அனிதாவுக்கு அஞ்சலி. தினகரனுக்கு உதவி செய்த திருமாவளவன்

  • IndiaGlitz, [Saturday,September 02 2017]

அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் மீது அனைவரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் எடப்பாடி தலைமையிலான அரசே இதற்கு காரணம் என்றும், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த நிலை இருந்திருக்காது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இன்று அதிமுக எத்தனை அணியாக பிரிந்திருந்தாலும் நீட் தேர்வுக்கும், அனிதாவின் மரணத்திற்கும் அத்தனை அணிகளும் பொறுப்பேற்க வேண்டும். ஒரு அணியினர் இன்னொரு அணியினர் மீது குற்றம் சுமத்தி தப்பிக்க முடியாது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த அவருடைய சொந்த ஊருக்கு சென்ற டிடிவி தினகரனுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தினகரனை பாதுகாப்பாக அழைத்து சென்று அஞ்சலி செலுத்த உதவியதாக செய்திகள் கூறுகின்றன.

More News

மருத்துவ முத்தம் போதும், இனி மருத்துவ யுத்தம்தான் தேவை: திரையுலகினர் கொதிப்பு

ஜல்லிக்கட்டு, நெடுவாசல், விவசாயிகள் பிரச்சனை என எந்த பிரச்சனைக்கும் முதல் ஆளாக குரல் கொடுப்பது திரையுலகினர்கள் தான்.

கருப்புச்சட்டை போட்டவர்களை எல்லாம் விசாரிக்கும் காவல்துறை: மெரீனாவில் பரபரப்பு

மருத்துவப்படிப்பு கனவு தகர்ந்ததால் நேற்று தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று மத்திய மாநில அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இளைஞர்களுக்கு கீர்த்திசுரேஷின் பணிவான வேண்டுகோள்

அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து கோலிவுட் நடிகர்கள் பலர் கருத்து கூறி வந்தாலும் நடிகைகளில் ஒருசிலர் மட்டுமே இதுகுறித்து கருத்து கூறியுள்ளனர்.

நீட் ஆதரவு தாய் தற்கொலையின் போது எங்கே போனீர்கள்? எச்.ராஜா

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி அனைத்து முயற்சிகளிலும் தோல்வி அடைந்த பின்னர் தனது மருத்துவ படிப்பு என்ற கனவு முற்றிலும் கலைந்ததை தாங்க முடியாமல்தான் நேற்று மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த அரசு யாருக்கான அரசு என்பதே கேள்விக்குறியாக உள்ளது. பா.ரஞ்சித்

மருத்துவ படிப்பு கனவு கலைந்ததால் நேற்று தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவுக்கு கோலிவுட் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நேற்று ஜி.வி.பிரகாஷ் அரியலூர் சென்று அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பதை பார்த்தோம், இந்த நிலையில் இன்று 'கபாலி', 'காலா' இயக்குனர் ரஞ்சித் அனிதாவின் உடலுக்கு இறுதி மரியாதை &