close
Choose your channels

தினகரன் போட்டி: மீண்டும் ஆர்.கே.நகரில் கொட்டப்போகும் பணமழை

Friday, November 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆர்.கே.நகரின் வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது முதல் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகியுள்ளன. இந்த தேர்தலில் அதிமுகவின் சின்னத்தை பெற்றுள்ள ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி புத்துணர்ச்சியுடன் களமிறங்கவுள்ளது.

இந்த நிலையில் ஆர்.கே.நகரில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தொப்பி சின்னம் கிடைக்காவிட்டால் எந்த சின்னம் கிடைத்தாலும் அதில் போட்டியிடுவேன். சின்னத்தை விட வேட்பாளர்தான் முக்கியம். இந்த நேரம் நெருக்கடியான நேரம் என்பதாலே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்' என்று கூறியுள்ளார்

கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பின்போது தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் பணத்தை தண்ணீராக இறைத்த கதை அனைவரும் அறிந்ததே. இந்த முறையும் தினகரன் போட்டியிடுவது உறுதி என்பதால் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு மீண்டும் ஒருமுறை அதிர்ஷ்டம் அடித்திருப்பதாக கருதப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.